ஷார்ஜாவில் நெருப்பு பற்றிய கப்பலில் இருந்து 13 இந்தியர்களை மீட்கபட்டுள்ளனர்.
ஷார்ஜாவின் காலித் துறைமுகத்தில் உள்ள கப்பல் ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 6 30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தக் கப்பலில் 6000 கேலன்கள் கொண்ட டீசல், 120 ஏற்றுமதி வாகனங்கள் மற்றும் 300 வாகன டயர்கள் ஆகியவை இருந்தன. தீ வேகமாக கப்பலில் பரவியது. கப்பலில் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.
இதனையடுத்து அங்கு வந்த தீயனைப்பு துறையினர் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அத்துடன் கப்பலில் மாட்டிக் கொண்டிருந்த 13 இந்தியர்களை பத்திரமாக மீட்டனர். இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் இன்றி தீயை அணைத்தனர். அதேபோல மீட்கப்பட்ட அனைவருக்கும் முதலுதவி மற்றும் தேவையான உணவு ஆகிய வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரி, “எங்களுக்கு சரியாக காலை 6.44 மணியளவில் தகவல் கிடைத்தது. இதனையடுத்து நாங்கள் சம்பவ இடத்தை ஐந்து நிமிடத்தில் அடைந்தோம். அதன்பின்னர் கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தோம். ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தோம். அத்துடன் கப்பலில் இருந்த 13 பேரை மீட்டு அவர்களை பத்திரமாக வெளியே கொண்டு வந்தோம்” எனத் தெரிவித்தார்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்