கிரிக்கெட் போட்டிகளின்போது ஆக்ரோஷமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்துவேன் என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனி, ஆக்ரோஷமான பேட்டிங்க்கு பெயர் பெற்றவர். பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிவரும் தோனி, சமீபத்தில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். கேப்டன் பதவியின் சுமை காரணமாக தோனியின் பேட்டிங்கில் பழைய வேகம் இல்லை, நிதானமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வருகிறார் என்றெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், கேப்டன் சுமை நீங்கியதால் பழைய தோனியைப் பார்க்கலாமா என்று அவரிடம் யுவராஜ் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்குப் பதிலளித்த தோனி, சரியான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு வெளியே அனுப்புவதில் எந்த பிரச்னையும் இல்லை. எனது இயல்பான ஆட்டத்தைத் தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்தார். இந்த வீடியோவை யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகிய பின்னர் அவருக்கு யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற விமர்சனத்துக்கும் இந்த வீடியோ மூலம் அவர் பதில் கொடுத்துள்ளார்.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்