புதுச்சேரி மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுவதாக டிஜிபி சுந்தரி நந்தா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த ஆண்டு மே மாதம் தலைக்கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கியது. எனினும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அதனை அரசு திரும்ப பெற்றது. இந்நிலையில் மீண்டும் நாளை மறுநாள் முதல் இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவதாக டிஜிபி அறிவித்துள்ளார்.
இதனை மீறினால் முதல்முறையாக பிடிபடுவோரிடம் 100 ரூபாயும், இரண்டாவது முறையாக சிக்கினால் 300 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். மூன்றாவது முறை சிக்கினால் 3 மாதத்திற்கு ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்தார். இதேபோல் காரில் செல்வோர் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் புதுச்சேரி டிஜிபி தெரிவித்தார்.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்