அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை செய்து கொண்ட மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி நாடு திரும்பினார், தாயகம் திரும்பியது மகிழ்ச்சியளிப்பதாக ஜெட்லி தன் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி அண்மைக்காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். இதனால் கடந்த ஆண்டு அவர் சிகிச்சை எடுப்பதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு பதிலாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டார். பின்னர் ஜேட்லி திரும்பியதும் நிதித்துறை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோன்று கடந்த ஜனவரி 23ஆம் தேதி அருண் ஜேட்லி சிகிச்சைக்காக சென்றபோது அவரது நிதித்துறை மீண்டும் பியூஷ் கோயாலிடம் சென்றது. அத்துடன் இலக்காக இல்லாத மத்திய அமைச்சராக அருண் ஜேட்லி இருப்பார் என அறிவிக்கப்பட்டது. பியூஸ் கோயலும் இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார். அருண் ஜேட்லி சிகிச்சை பெற்று வந்த போதிலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் போலவே கருத்துகளை பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில், அருண் ஜெட்லி சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பியுள்ளார். தாயகம் திரும்பியது மகிழ்ச்சியளிப்பதாக ஜெட்லி தன் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், அருண் ஜெட்லி தாயகம் திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தன்னுடைய ட்விட்டரில் கூறியுள்ளார்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?