தமிழகத்தில் கடந்தாண்டில் மட்டும் புதிதாக 1.03 லட்சம் பேர் காச நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நாட்டில் 21.32 லட்சம் பேர் புதிதாக காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகப்பட்சமாக 4.10 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்தாண்டில் மட்டும் புதிதாக 1.03 லட்சம் பேர் காச நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
தென்இந்தியாவை பொருத்தவரை தமிழகத்தில் தான் கடந்தாண்டில் அதிகம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ஆந்திராவில் 91,157 பேரும், கர்நாடகாவில் 83,732 பேரும், தெலங்கானாவில் 52,395 பேரும் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கேரளாவில் குறைவாக 24,535 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டுக்கள் இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!