‘பாரத் மாதா கீ ஜே’ சொல்லாத சபாநாயகரிடம் பதவியேற்க முடியாது என்று தெலுங்கானா பாஜக எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் 88 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சியை தக்க வைத்தது. அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி 7 இடங்களை கைப்பற்றியது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 19 இடங்களை கைப்பற்ற, பாஜக ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அசாதுதீன் கட்சியைச் சேர்ந்த மும்தாஜ் அகமது கானை தற்காலிக சட்டசபை சபாநாயகராக நியமிக்க டிஆர்எஸ் முடிவு செய்துள்ளது.
பாஜகவைச் சேர்ந்த ஒரே எம்.எல்.ஏவான ராஜா சிங், அகமது கானிடம் எம்.எல்.ஏவாக பதவியேற்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பேசிய வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
#Telangana government decided to make #AIMIM MLA as pro-tem Speaker of newly elected #Telangana Assembly.
I wouldn't take Oath in front of such speaker. pic.twitter.com/FJ8OniiDFd— Raja Singh (@TigerRajaSingh) January 6, 2019
அதில், “தற்காலிக சபாநாயகரான அகமது கானின் கட்சி ஹிந்துக்களை மறைக்க நினைப்பதால், அவரிடம் பதவியேற்க நான் விரும்பவில்லை. அவர்கள் வந்தே மாதரம் பாடலை பாடியதேயில்லை. பாரத் மாதா கீ ஜே சொன்னதே இல்லை” என்று ராஜா சிங் கூறியுள்ளார். எம்.எல்.ஏ ராஜா சிங் சர்ச்சையான பேச்சுக்களுக்கு அடிக்கடி பேசப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
கியான்வாபி மசூதி வழக்கு: வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க தடை
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்