டெல்லியில் 29-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை நேரில் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், அவர்களுடன் தரையில் அமர்ந்து மண் சோறு சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நானும் ஒரு விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர்தான். தேமுதிக என்கிற கட்சி சார்பில் இங்கு வரவில்லை. விவசாயிகளுக்காக வந்துள்ளேன். அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தேன். நதிநீர் இணைப்பு, கடன் தள்ளுபடி, முதியோர் பென்சன் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்ட அவர்கள். நேற்று உச்சப்பட்டமாக நிர்வாண போராட்டத்தையே நடத்தியுள்ளனர். இது அவர்களுக்கு தலைகுனிவு அல்ல. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருக்கும் தலைகுனிவுதான். இவர்கள் இங்கே கஷ்டப்படும் போது நாம் எப்படி அங்கே சந்தோஷமாக இருக்க முடியும். தமிழகத்தில் தற்போது வறட்சி நிலவுகிறது. அனைத்து ஏரிகளையும் தூர்வாற இதுதான் சரியான நேரம். எனவே ஒவ்வொரு நீர்நிலையும் மழைக்காலம் தொடங்கும் முன்பு தூர்வாரப் பட வேண்டும்.
தமிழகத்திலிருந்து விவசாயிகள் இங்கு வந்து போராடி வருகின்றனர். ஆனால் தமிழக முதலமைச்சர் பழனிசாமியே இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து பேசவில்லை. மாநில அரசு நாம் ஏன் தலையிட வேண்டும் என்று கருதாமல் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளபடி, நநிநீர் இணைப்பு, பயிர்க் கடன் தள்ளுபடி, முதியோர் பென்சன் ஆகியவை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai