கஜா புயல் நிவாரணப் பணிகள் வழங்க நாகை சென்ற போது மாரடைப்பால் உயிரிழந்த நாகராஜ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் திருவறும்பூர் மலைக்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் அப்பகுதி மக்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி ஒரு வாரத்திற்கு முன்பு நாகராஜ் பணிக்காக திருவாரூர் வந்துள்ளார். அப்போது பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நாகராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அமைச்சர்கள் காமராஜ், சரோஜா உள்ளிட்டோர் நாகராஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினர்.
இந்நிலையில், உயிரிழந்த நாகராஜ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?