தீபாவளி பண்டிகையையொட்டி இன்று இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி பண்டிகையையொட்டி, ஆடுகள், மாடுகள், கோழிகளின் விற்பனை அதிகமிருந்தது. பண்டிகையையொட்டி விலை உயர்ந்திருந்த நிலையில், தமிழகம் முழுவதும் சுமார் 20 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. தீபாவளிக்காக ஆடு, மாடுகளை வாங்க தமிழகம் மட்டுமின்றி கேரள மாநிலத்திலிருந்த சந்தைகளிலும் விற்பனை அமோகமாக இருந்தது.
இந்நிலையில் மதுரையில் தீபாவளி பண்டிகையையொட்டி இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆட்டிறைச்சி ஒரு கிலோ 500 ரூபாய்க்கும், கோழி இறைச்சி 150 ரூபாய்க்கும், நாட்டுக்கோழி 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு இறைச்சி விலை உயர்ந்திருந்தாலும், மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
Loading More post
இபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு
`பாட்டு பாடியே கொலை மிரட்டல்’- சென்னை இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்
தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம் - நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
நள்ளிரவில் நெரிசலுக்கு உள்ளாகும் பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலை: கவனிக்குமா நிர்வாகம்?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix