கல்லூரி ஒன்றில் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவர்கள் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம டைந்தனர்.
ரஷ்ய நாட்டில் கருங்கடலை ஒட்டியுள்ள கிழக்கு பகுதியான கெர்ச் நகரில் தொழில்நுட்ப கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல் லூரியில் படிக்கும் மாணவன் விளாடிஸ்லவ் ரோஸ்லியாகோவ் (18). இவர் திடீரென்று சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் 19 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பின்னர் அவர் தன் னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாக்குதல் நடத்திய மாணவன் கல்லூரியின் உணவு விடுதி அருகே உலோகங்களால் நிரப்பப்பட்டிருந்த குண்டு ஒன்றை வெடிக்கச் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தனது தோழி மீது ஏற்பட்ட கோபம் காரணமாக அந்த மாணவன் இப்படி செய்துகொண்ட தாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். கிரைமியாவில் வியாழன் முதல் மூன்று நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(சிசிடிவி கேமராவில் விளாடிஸ்லவ்)
சோவியத் யூனியன் 1991 ஆம் ஆண்டு உடைந்தபிறகு, கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைன் நாட்டின் கிரைமியா பகுதியை ரஷியா இணைத்துக் கொண்டது. மக்களின் விருப்பப்படியே அவர்கள் தங்கள் நாட்டுடன் இணைந்ததாக ரஷியா தரப்பு தெரிவித்துவருகிறது. இருந்தாலும் இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகள் சில எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்