பரிகாரப் பூஜை செய்வதாகக்கூறி 15 சவரன் நகையுடன் தலைமறைவான போலிச் சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி அருகே குமணன்சாவடியைச் சேர்ந்தவர் வசந்தா. தனது மகளுடன் கடந்த மாதம் மேல்மலையனூர் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சாமியார் பாபு என்பவர், பரிகாரம் செய்தால் உங்கள் மகளுக்கு விரைவில் திருமணம் ஆகிவிடும் என்று வசந்தாவிடம் கூறியுள்ளார். அதை நம்பிய வசந்தா, பரிகாரம் செய்வதற்காக கடந்த வாரம் பாபுவை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். வசந்தா வீட்டுக்கு வந்த பாபு, பரிகார பூஜைகளை முடித்த பிறகு, உங்களிடம் உள்ள நகை மற்றும் பணத்தை கொடுங்கள், அவற்றை மேல்மலையனூர் கோயிலில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று வசந்தாவிடம் கூறியதாகத் தெரிகிறது. அவரது பேச்சை நம்பி வசந்தா, 15 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்க, அவற்றோடு பாபு தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து வசந்தா அளித்த புகாரின் பேரில் மேல்மலையனூரில் தலைமறைவாக இருந்த போலிச் சாமியார் பாபு கைது செய்யப்பட்டார்.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix