மூத்த பத்திரிகையாளர்கள் எம்.எம்.கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டது ஒரே துப்பாக்கியால்தான் எனத் தடயவில்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மூத்த பத்திரிகையாளரும், ஹம்பி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான எம்.எம்.கல்புர்கி கடந்த 2015ஆம் ஆண்டு அவரது வீட்டு வாசலில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் தொடர்ந்து இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்ததால், இவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. பின்னர் இவர் காவல் பாதுகாப்பு வேண்டாம் என்ற கோரிக்கையை விடுத்ததால், அது திரும்பப் பெறப்பட்டது. காவல்துறை பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்ட 3 மாதங்களுக்குப் பிறகு இவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரை சுட்டது மர்ம நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.
இதேபோன்று பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், கடந்த வருடம் பெங்களூருவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்திற்கு மூத்த பத்திரிகையாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்திய அரசு வழங்கிய சாஹித்ய அகாதெமி விருதினை பல எழுத்தாளர்கள் திரும்ப ஒப்படைத்தனர். மேலும் கொலை தொடர்பாக சிசிடிவி கேமராக் காட்சிகள் வெளியாகின.
இந்நிலையில் இந்த இரண்டு கொலை சம்பவங்களிலும் ஒரே ரக துப்பாக்கிதான் பயன்படுத்தப்பட்டுள்ளது என தடயவில்துறை தெரிவித்துள்ளது. பெங்களூரு நீதிமன்றத்தில் கவுரி லங்கேஷ் கொலை வழக்கு விசாரணையின் போது, தனிப்படை காவல்துறையினர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர். இருவரும் சுடப்பட்டது 7.5 எம்எம் கலிபெர் பிஸ்டல் ரக துப்பாக்கியில்தான் என அவர்கள் உறுதிசெய்துள்ளனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!