போபால் நகரில் சைரனுடன் வந்த கார் ஒன்றினை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். காரில் இருந்து இறங்கியவர்களிடம் டிராபிக் போலீசார் விசாரித்துள்ளனர். ஆனால், காரில் வந்தவர் தான் முதலமைச்சரின் மைத்துனர் என்று கூறி போலீசாரை மிரட்டியுள்ளார். அந்த காரில் மேலும் இரண்டு பெண்கள் வந்துள்ளனர். அதில் ஒருவர் தன்னுடைய செல்போனை எடுத்து அதில் ஒரு நம்பரை டயல் செய்கிறார். அது முதலமைச்சரின் எண் என்று போலீசாரிடம் கூறுகிறார். இந்த விஷயம் முழுவதும் கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.
போலீசாருடன் பிரச்னை செய்த அந்த மூன்று பேரும் யார் என்பது இன்னும் தெரியவில்லை. போலீசார் விசாரித்து வருகிறார்கள். அவர்கள் வந்த எஸ்.யு.வி வகை சொகுசு கார் ராஜேந்திர சிங் சவுகான் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பதவியில் இருப்பவர்கள் மட்டுமே சைரனை பயன்படுத்த முடியும். அதனால், காரில் வந்தவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து மத்திய பிரதேசம் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், “எனக்கு கோடிக்கணக்கான சகோதர, சகோதரிகள் இருக்கிறார்கள். ஆனால் சட்டம் தன் கடமையை செய்யும்” என்று கூறினார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!