20 லட்சம் பேர் ஹஜ் புனித யாத்திரைக்காக மெக்காவில் குவிந்துள்ள நிலையில், நோய் பரவும் அபாயம் ஏதும் ஏற்படவில்லை என சவுதி அரசு தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் ஐந்து நாள் ஹஜ் யாத்திரை கடந்த வாரம் தொடங்கியது. இதையொட்டி உலகம் முழுவதும் இருந்து சுமார் 20 லட்சம் பேர் ஹஜ் புனித யாத்திரைக்காக மெக்காவில் குவிந்து உள்ளனர். தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலானவர்கள் மெக்காவில் உள்ள தற்காலிக முகாம்களிலேயே தங்கியிருக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் மழை காரணமாக நோய் பரவும் ஆபத்து ஏதும் ஏற்படவில்லை என்றும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்திருப்பதாகவும் சவுதி சுகாதாரத்துறை அமைச்சர் தவ்ஃபிக் அல் ரபியா தெரிவித்துள்ளார். சுகாதாரத்தை பேணுவதற்காக சுமார் 30 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புனித யாத்திரைக்கும் வருபவர்களின் வசதிக்காக 25 மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன என சவுதி அரசு தெரிவித்துள்ளது.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!