நீதிபதி கே.எம் ஜோசப்பின் சீனியாரிட்டி குறைக்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் மூத்த நீதிபதிகள் முறையிட்டனர்.
நீதிபதிகளை பரிந்துரைக்கும் கொலீஜியம் அமைப்பில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நேரில் சந்தித்தனர். அப்போது, உத்தரகாண்ட் தலைமை நீதிபதியாக இருந்த ஜோசப்பின் பெயர் 6 மாதங்களுக்கு முன்பே கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டதாகவும், ஆனால் மத்திய அரசு அறிவிக்கையில் அவரது பெயர் மூன்றாவதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உறுதியளித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வினீத் சரண், ஜோசப் ஆகியோர் பெயரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஏற்பதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. அவர்கள் இன்று பதவியேற்றும் நிலையில், பணி மூப்பு தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டுள்ளது.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்