டெல்லி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் 9 நாள் தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகளின் அறிவிக்கப்படாத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரக்கோரியும், ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கக்கோரியும் டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலின் அலுவலகத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணாவில் ஈடுபட்டு வந்தார். கடந்த 11 ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வந்த கெஜ்ரிவாலுடன் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர செயின் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.
அவர்களின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பிறகு இருவரும் வீடு திரும்பிய நிலையில், கெஜ்ரிவாலின் தர்ணா போராட்டம் இன்று மாலை வரை நீடித்தது. இந்நிலையில், துணை நிலை ஆளுநரின் வேண்டுகோளையடுத்து தனது தர்ணா போராட்டத்தை கெஜ்ரிவால் திரும்பப்பெற்றுள்ளார். தலைமைச்செயலக ஐஏஎஸ் அதிகாரிகளுடன் பேச்சு நடத்த ஆளுநர் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் தனது 9 நாள் போராட்டத்தை திரும்பப்பெற்றுள்ளார்.
Loading More post
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்