திருவள்ளூரில் 15 வயது சிறுமியை போதைக்கு அடிமையாக்கி பாலியல் வன்கொடுமை செய்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவள்ளூரில் கோடை விடுமுறையின்போது தோழி வீட்டிற்கு சென்ற 10ம் வகுப்பு மாணவி வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
சிறுமியை தேடிய காவல்துறையினர் அதேபகுதியில் மதுபோதையில் தள்ளாடியப்படி கோவில் அருகே பெண்ணை மீட்டனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், திருவள்ளூரைச் சேர்ந்த ராஜேஷ், நவீன்குமார் உள்பட 6 பேர் சிறுமிக்கு மது மற்றும் கஞ்சா கொடுத்து போதைக்கு அடிமையாக்கி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்து மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்