சசிகலாவை தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை அப்போலோவில் பார்க்கவில்லை என்று திவாகரன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா சகோதரர் திவாகரன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 4 மணி நேரத்துக்கும் மேலாக திவாகரனிடம் விசாரணை நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் திவாகரன் பேசுகையில், “ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து என்னிடம் கேட்டார்கள், நான் விளக்கம் அளித்துள்ளேன். ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே இறந்து விட்டதாக தகவல் வந்தது. அதைதான் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் கூறினேன். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை. அப்போலோவிற்கு 2 முறை சென்றும் ஜெயலலிதாவை உயிருடன் பார்க்க முடியவில்லை; இறந்தபின்பே பார்த்தேன்” என்று கூறினார்.
ஜெயலலிதா மரணம் குறித்து இருவேறு கருத்துக்களை திவாகரன் சொல்லியிருந்தார். அதன் அடிப்படையில் அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!