காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழகத்தில் நாளை மருந்து கடைகள் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து மருந்து கடைகளும் அடைக்கப்படும் என தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. நாளை அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பிலும் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஓட்டல்கள் சங்கமும் நாளை முழு அடைப்பில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது. கோயம்பேடு காய்கறி கடைகள், பூக்கடைகள் நாளை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய போராட்டத்தில் மருந்து கடைகளும் இணைந்துள்ளன. தமிழகத்தில் நாளை மருந்து கடைகள் அடைக்கப்படுவதாக தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். பொதுமக்கள் அத்தியாவசிய மருந்துகளை இன்றே வாங்கி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவரச தேவைகளுக்கு 044-28191522 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மருந்து பொருட்களை வாங்கிகொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!