வேலூர் குடியாத்தம் அருகே சாலையோரத்தில் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள சேத்துவண்டை பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தின் அருகில் சாலையோரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. நீண்ட நேரம் கேட்கவே சந்தேகமடைந்த பொதுமக்கள் அங்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று யாருமின்று அழுதுகொண்டு இருந்துள்ளது. இதைக்கண்ட மக்கள் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த 108 ஆம்புலன் ஊழியர்கள் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவுசெய்துள்ள போலீஸார், குழந்தையைக் கண்டெடுத்தது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அத்துடன் குழந்தையை வீசிச் சென்றது யார் என விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
Loading More post
இபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு
`பாட்டு பாடியே கொலை மிரட்டல்’- சென்னை இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்
தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம் - நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
நள்ளிரவில் நெரிசலுக்கு உள்ளாகும் பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலை: கவனிக்குமா நிர்வாகம்?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix