குன்றத்தூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குன்றத்தூரில் கடந்த 10-ம் தேதி, அசோக் குமார், ஜெயஸ்ரீ தம்பதி குன்றத்தூர் இரண்டாம் கட்டளை பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். சிறிது தூரத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திய இரண்டு இளைஞர்களில் ஒருவர் அவர்களை பின்தொடர்ந்தார். சில விநாடிகளில் அவர் ஜெயஸ்ரீ கழுத்தில் இருந்த நகையை பறித்துக் கொண்டு ஓடினார்.
இதில் நிலைதடுமாறி ஜெயஸ்ரீ கீழே விழ அவரது கணவர் கொள்ளையனைத் துரத்திச் சென்றபோதும், கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பினர். இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பொழிச்சலூரைச் சேர்ந்த சிவா மற்றும் சாலமன் என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டனர். இருவரும் நண்பர்கள் என்பதும், நீண்ட நாட்களாக செயின் பறிப்பில் ஈடுபட்டு வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஜெயஸ்ரீயிடம் இருந்து செயினைப் பறித்துச் சென்ற சிவா, புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவரான சாலமனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'