சென்னை அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது காவல்துறையிடமிருந்து தப்பிய ரவுடி பினுவை தேடி ஈரோட்டில் உள்ள லாட்ஜ்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை பூந்தமல்லி அடுத்த மலையம்பாக்கத்தில் கடந்த 6-ம் தேதி இரவு ரவுடி பினுவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட 76 ரவுடிகளை போலீ ஸார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அப்போது ரவுடிகளின் தலைவன் பினு உள்ளிட்ட சுமார் 25 பேர் தப்பியோடிவிட்டனர். தப்பிய ரவுடி பினுவை தேடி ஈரோட்டில் உள்ள லாட்ஜ்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர, பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பல ரவுடிகள் வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளதால் அங்கும் தனிப்படையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ரவுடிகள் அனைவரும் எத்தகைய செயலிலும் ஈடுபடக்கூடியவர்கள் என்பதால், தேவைப்படின் அவர்களை சுட்டுப்பிடிக்குமாறும் தனிப்படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பிறந்த நாள் கொண்டாட இடம் கொடுத்த லாரி செட் உரிமையாளர் வேலுவை தேடி திண்டிவனத்திலும் போலீசார் முகாமிட்டுள்ளனர். வேலு மீது திண்டிவனத்தில் செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு, கொலை முயற்சி வழக்கு இருப்பதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
Loading More post
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
விராலிமலை: விஏஓ வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி - ஒருவர் கைது
பேராவூரணி அருகே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு!
மாயமான பள்ளி மாணவி - காதல் கணவனுடன் மைசூரில் இருந்து மீட்பு
'Chessable Masters' தொடர்: ஒரு தவறான நகர்த்தலால் ஃபைனலில் பிரக்ஞானந்தா தோல்வி!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!