தனுஷின் அங்க அடையாளங்களை ஆராய்ந்த மருத்துவரின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனுஷ் தொடர்பான அனைத்து வழக்குகளும் மார்ச் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று உரிமை கோரி மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தனுஷ் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணையின் போது கதிரேசன் -மீனாட்சி தரப்பில் சில சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த சான்றிதழ்களில் உள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளனவா என கண்டறிய அவரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அவர் நேரில் ஆஜரானார்.
இதனிடையே, தனுஷிற்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் எனக்கோரி கதிரேசன் தம்பதியர் புதிதாக ஒரு மனுவையும் நேற்று தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், தனுஷின் அங்க அடையாளங்களை ஆராய்ந்த மருத்துவரின் அறிக்கை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, தனுஷ் தொடர்பாக தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் வரும் மார்ச் 9-ஆம் தேதி வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்