நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கில் சட்டப்பேரவை செயலருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சட்டப்பேரவையில் கடந்த 18-ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. இதை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. திமுக கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார். இதனால் திமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்குள்ளேயே போராட்டம் நடத்தினர். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு முறையாக நடைபெறவில்லை எனவும் வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியும் திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணையில், முதலமைச்சர், தலைமைச் செயலாளர், மத்திய உள்துறை செயலாளர் ஆகியோர் 2 வாரத்தில் பதில் அளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், வழக்கு விசாரணையை மார்ச் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!