அதிமுகவுக்கு ரத்தமும் சதையுமாக உள்ள தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர் என்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் இன்று பதவியேற்றுக் கொண்டார். தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபால் தினகரனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது செந்தில் பாலாஜி, வெற்றிவேல் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.
எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற பின்னர் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தினகரன், மனதளவில் பல அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் எங்கள் பக்கம் உள்ளனர் என்று கூறினார். மேலும் அவர் பேசுகையில், “சசிகலா தலைமையிலான இயக்கமே உண்மையான அதிமுக என ஆர்.கே. நகர் மக்கள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். அதிமுகவுக்கு ரத்தமும் சதையுமான உள்ள தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். பதவியில் இருக்க வேண்டும் என்ற ஐந்தாறு பேரின் சுயநலத்திற்கு துணைப் போக வேண்டாம்.
சட்டமன்ற வாக்கெடுப்பின் போது எங்களது ஸ்லீப்பர் செல்கள் செயல்படுவார்கள். ஜனவரி 20-ம் தேதிக்குள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வரும். வரலாற்றில் துரோகத்திற்கு என்றைக்குமே வெற்றி கிடைத்ததில்லை” என்றார்.
Loading More post
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!