திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசமுடன் கண்டு தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர்.
இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய விழாவான பரணி தீபம் இன்று அதிகாலை ஏற்றப்பட்டது. அதனையடுத்து 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் கண்டு தரிசனம் செய்தனர். மலை மீது தீபம் ஏற்றுவதற்காக தீபக் கொப்பரை தலைச்சுமையாக பொதுமக்களால் நேற்று எடுத்துச் செல்லப்பட்டது. 3.5 டன் நெய், 1 டன் எடை கொண்ட திரி மூலம் மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது.
மகா தீபத்தை காண்பதால் வாழ்வில் இருள் விலகி வெளிச்சம் வரும் என பக்தர்கள் கருதுகின்றனர். மலை மீது ஏற நீதிமன்ற உத்தரவின்படி 2,500 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தீபத் திருநாளை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளதால் 2 ஐஜிக்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Loading More post
'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து
”என் உடல் பலமாக இல்லைதான்; ஆனால் என் இதயம்..” - மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை
`98.55% என்றானது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம்!’- மத்திய அரசு தகவல்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide