கிருஷ்ணகிரியில் உடைப்பு ஏற்பட்டுள்ள கே.ஆர்.பி அணையின் மதகு 3 நாட்களில் சரி செய்யப்பட்டு விடும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை மதகு உடைந்ததை அடுத்து துணை சபாநாயகர் தம்பிதுரை அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதகு உடைந்தது எதிர்பாராத ஒன்று. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவது குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவித்தார். கெலவரப்பள்ளி அணையில் தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். தென்பெண்ணையில் கர்நாடக அரசு அணைகட்ட தமிழக அரசு அனுமதிக்காது என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.பி. அணை 52 அடி கொள்ளளவு கொண்டது. 51 அடிக்கு தண்ணீர் இருந்த நிலையில் அணையின் பிரதான மதகு பகுதியில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி வருவதால் 5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று கே.ஆர்.பி. அணையில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், வல்லுநர்கள் அணையை ஆய்வு செய்து வருகின்றனர்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி