சாயல்குடி அருகே கிணறு தோண்டும்போது மண் சரிவில் சிக்கிய இருவர், ஒருமணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே தொழிலாளர்கள் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் இரண்டு தொழிலாளர்கள் மண்ணுக்குள் சிக்கினர். அதில் ஒருவர் பெண் தொழிலாளி.
இதனையடுத்து மண்ணுக்குள் மூழ்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. மண்வெட்டியால் தோண்டும்போது, மண்ணுக்குள் சிக்கியுள்ளவர்களின் உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, அதற்கேற்றாற்போல் மண் தோண்டப்பட்டது. ஏராளமான தொழிலாளர்கள், மண்ணுக்குள் சிக்கிய இருவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட ஒருமணி நேரத்திற்கு பின் மண்ணுக்குள் சிக்கிய மாரிக்கனி, சண்முகம் ஆகிய இருவரும் மீட்கப்பட்டனர். இதனையடுத்து அவர்களை தீயணைப்புத்துறையின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்