ராமநாதபுரத்தில் குழந்தையை கடத்தி தனியார் காப்பகம் மூலம் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் ரூபாய்க்கு விலை பேசப்பட்ட குழந்தை தற்போது மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை பகுதியில் ஆதார் டிரஸ்ட் என்ற தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு குழந்தை ஒன்றை விற்பனை செய்வதற்காக ரூபாய் 4 லட்சம் வரை பேரம் பேசப்படுவதாக மனித கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆதார் டிரஸ்ட்டில் குழந்தைகள் நல அமைப்பினர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பிறந்து ஒருமாதமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று தொட்டிலில் கிடந்தது. உடனே அதிகாரிகள் இதுகுறித்து அங்குள்ளவர்களிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில் 1 மாத குழந்தையை ஆட்டோ ஓட்டுநர் கதிரேசன் என்பவர் இங்கு வந்து கொடுத்தது தெரியவந்தது. அந்த குழந்தையை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது திருடப்பட்ட குழந்தையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தையை இங்கு கொண்டுவந்து கொடுத்த ஆட்டோ டிரைவர் கதிரேசனையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Loading More post
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்