ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராணுவம் அதிரடியாக அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. எனினும் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடவில்லை என ராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நாட்டின் சமூக மற்றும் பொருளாதாரத்தை நசுக்கும் அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு நெருக்கமான நபர்களை குறிவைத்து ராணுவம் இந்நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் அதிபர் முகாபே வீட்டுக் காவலில் இருப்பதாக அவருடன் தொலைபேசியில் உரையாடிய தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா தெரிவித்துள்ளார். அதேசமயம் அதிபர் முகாபேவும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
மேலும் ராணுவ நடவடிக்கை தொடர்பாக முகாபேவும் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. துணை அதிபர் எம்மர்சனை பதவியில் இருந்து நீக்கியதை தொடர்ந்து ராணுவம் இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் அங்கு ராணுவ புரட்சி நடந்துள்ளதா என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. இந்நிலையில் ஜிம்பாப்வேயில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக ஹராரேயில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி புதிய தலைமுறையிடம் தொலைபேசி வழியாகத் தெரிவித்துள்ளார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!