குளோபல் லீக் தொடரை நடத்துவதாக ஆசைக்காட்டி மோசம் பண்ணிவிட்டார்கள் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின் வேதனை தெரிவித்துள்ளார்.
8 அணிகள் பங்கேற்கும் குளோபல் லீக் தொடரை நடத்த தென்னாப்பிரிக்க கிரிக்கட் வாரியம் முடிவு செய்திருந்தது. நவம்பர் 3 ஆம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை இதை நடத்துவதாக அறிவித்திருந்தார்கள். இதில் ஒரு அணியை இந்தியாவைச் சேர்ந்த நடிகை பீரீத்தி ஜிந்தாவும், இன்னொரு அணியை நடிகர் ஷாரூக் கானும் வாங்கியிருந்தனர். இந்நிலையில் இந்த தொடரை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தள்ளி வைத்துள்ளது.
இதுபற்றி ஸ்டெயினிடம் கேட்டபோது, ‘இந்த போட்டியை தள்ளி வைத்தது இளம் வீரர்களின் நம்பிக்கையை தளர்த்துவிட்டது. இந்த போட்டியின் மூலம் இளம் வீரர்கள் கொஞ்சம் பணம் சம்பாதித்திருப்பார்கள். அதில், அவர்கள் காரோ, வீடோ வாங்கியிருக்கலாம். ஆனால், ‘ஒரு லட்சம் அமெரிக்க டாலர் தர்றோம்’ என்று ஆசைக் காட்டிவிட்டு அடுத்த சில வாரங்களில், ‘அதெல்லாம் தர முடியாது’ என்று சொன்னால் எப்படியிருக்கும்? அப்படித்தான் நடந்திருக்கிறது இப்போது. டிவில்லியர்ஸ் போன்ற வீரர்களை எந்த நாட்டில் இருக்கும் அணியும் ஒப்பந்தம் செய்யும். ஏனென்றால் அவர் சிறந்த வீரர் என்பதை உலகம் அறியும். இதே போல இளம் வீரர்களுக்கு தங்கள் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பாக, குளோபல் லீக் இருந்திருக்கும். அது கிடைக்காமல் போனது வருத்தம்தான்’ என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!