தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் இரட்டை இலை சின்னத்தின் விசாரணையை தினகரன் தரப்பினர் தடுக்க நினைக்கின்றனர் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக நாளை டெல்லி தேர்தல் ஆணையத்தில் நடைபெறவுள்ள விசாரணைக்காக டெல்லி புறப்பட்டு சென்ற தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றபோது, எங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக எடுத்துரைத்துள்ளோம். இதுதொடர்பாக நாளை நடைபெறவுள்ள விசாரணையில், தேவையான ஆவணங்களை தேர்தல் ஆணையம் சமர்பிக்குமாறு கேட்டுக்கொண்டதால், தேவையான அனைத்து ஆவணங்களையும் சட்டப்படியும், முறைப்படியும் சமர்பித்துள்ளோம். தினகரன் தரப்பினர் தான் இந்த விசாரணையை காலதாமதப்படுத்த வேண்டும் என்றும், விசாரணை நடைபெறக்கூடாது என்றும் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அவை அனைத்தையும் முறியடித்து, தேர்தல் ஆணையத்தில் எங்கள் தரப்பு வாதங்களை எடுத்துரைத்து, உண்மையான அதிமுக, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில் தான் செயல்படுகிறது என்பதை நிரூபித்து, இரட்டை இலை சின்னத்தை பெறுவோம்.” என்று கூறினார்.
Loading More post
'கொலையாளிகள் தூக்கிலிடப்படும் வரை பதற்றம் குறையாது' - கன்னையா லாலின் மகன் பேட்டி
டாய்லெட் நீரில் பீர்: ப்பா செம டேஸ்ட்டா இருக்கேனு ருசிக்கும் சிங்கப்பூர் மக்கள்!
முதலில் கூட்டு பாலியல் வன்கொடுமை, பின்பு மதமாற்றம் - உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி!
காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பாஜகவினர் 8 பேர் மீது வழக்கு
இங்கிலாந்துக்கு 'ஷாக்' கொடுத்த ரிஷப் பண்ட், ஜடேஜா - மீண்டது இந்திய அணி
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்