தமிழகத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இன்று மட்டும் 6 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக பல்வேறு இடங்களில் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் வைரஸ் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். சேலம் ஓமலூரை சேர்ந்த மாரிமுத்து, திருப்பூரை சேர்ந்த சண்முகப்பிரியா, திருச்சியை சேர்ந்த கனிமொழி உள்ளிட்ட 6 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலால் நாளுக்குநாள் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அரசு சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் பொதுமக்களும், டெங்கு கொசு பரவாமல் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாக வழி வகுக்கும் சுகாதாரமற்ற கடைகள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!