நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் திமுக ஆதரவு அளிக்கும் என சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதிமுகவில் சசிகலா - பன்னீர்செல்வம் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசுக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என கூறினார்.
மேலும் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளிப்பது பற்றி தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் க.அன்பழகன் முடிவு எடுப்பார்கள் எனக் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழலில் திமுக ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கும் எனவும், நிர்வாகிகள் யாரும் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிக்க வேண்டாம் எனவும் ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.
Loading More post
குஜராத்: தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழப்பு - 20 பேரின் நிலை என்ன?
’சர்வாதிகாரிகள் மரித்துப் போவார்கள்’-கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு!
’குற்றவாளிகள் நிரபராதிகள் அல்ல’ - பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து காங். போராட்டம் அறிவிப்பு
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் பட்டேல் - விரைவில் பாஜகவில் ஐக்கியமா?
தி.மலையில் கருணாநிதி சிலை வைக்கும் இடம் குறித்த வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்