உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும்போது எதிரே வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு சிறுமி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
அலகாபாத் மாவட்டத்தில் நைனி ரயில் சந்திப்பில் புவனேஷ்வர் - ராஜ்தானி எக்ஸ்பிரஸில் மோதி ஒரு சிறுமி உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இச்சம்பவம் விடியற்காலை 3.30 மணியளவில் நடந்ததாக காவல்துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் சுசிலா தேவி, அவரது 15 வயது மகள் ஷீலு லதா, சுசிலாவின் அண்ணி பிரிஜ்கலி மற்றும் விஜய்குமார் என தகவல் வெளியாகியுள்ளது.
கிராமவாசிகள் ரயில்வே தண்டவாளங்களை கடந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்லும்போது இந்த விபத்து நடைப்பெற்றுள்ளதாக காவல்துறையினர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ரயில் மோதி ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!