இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் 2015 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் கடந்தாண்டு குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு நாட்டில் 9 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்தனர். அது கடந்தாண்டு 8 லட்சத்து 40 ஆயிரமாக குறைந்துள்ளது. அதாவது 2015ம் ஆண்டு ஆயிரம் குழந்தைகளில் 37 பேர் உயிரிழந்தனர். அந்த இறப்பு விகிதம் கடந்தாண்டு ஆயிரம் குழந்தைகளுக்கு 34 ஆக குறைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் கடந்தாண்டு குழந்தைகள் இறப்பு விகிதம் 8 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்த இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது. ஆண், பெண் குழந்தைகளுக்கிடையேயான பாலின இறப்பு விகிதம் 10% குறைந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 4-ம் ஆண்டு நினைவுநாள்; பாதுகாப்புக்காக போலீசார் குவிப்பு
பாகிஸ்தான் பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வழங்கிய ராணுவ வீரர் கைது
கலால் வரியை குறைத்த மத்திய அரசு...சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?
அறந்தாங்கி: `பாதி வேலைதான் முடிஞ்சிருக்கு; ஆனா’ - இலவச வீடு கட்டுமானத்தில் ஊழல்?
`அப்போது இல்லாமல் இப்போது கேட்பதுதான் கூட்டாட்சியா?’- நிதியமைச்சர் பிடிஆர் கேள்வி
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!