காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்ந்து வரும் கனமழை காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 50ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும், பரிசல் சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் ஆற்றில் நீர் வரத்து 24ஆயிரம் கன அடியாக இருந்தது. இந்நிலையில், தருமபுரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்துவரும் நிலையில் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு இன்று நண்பகல் நிலவரப்படி 50ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வந்தது. பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனிடையே மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 87 அடியாக அதிகரித்துள்ளது. 90 அடியை எட்டும்போது அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்படும் என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!