உண்மைக்கு மாறாக பேசுவதை தினகரன் நிறுத்தாவிட்டால் பல தகவல்களை வெளியிட வேண்டி வரும் என அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீட் தேர்வில் இருந்து தமிழக அரசு விலக்கு பெறாததே மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணம் என தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் தினகரன் அணி சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய தினகரன், 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது தவறு என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம் என்றார். மேலும், ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு எதிராக முதலமைச்சர் செயல்படுவதாகவும், அவரை விரைவில் வீட்டிற்கு அனுப்புவோம் என்றும் கூறினார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், உண்மைக்கு புறம்பாக பேசுவதை தினகரன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் பல்வேறு தகவல்களை வெளியிட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். அத்துடன் முதலமைச்சர் மீது இல்லாத ஒரு வழக்கை இருப்பது போன்று தினகரன் அவதூறு பரப்புவதாகவும் உதயகுமார் கண்டனம் தெரிவித்தார்.
Loading More post
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!