ஜெய்ப்பூர் நகரில் ஒரே நேரத்தில் அதிகம் பேர் சிகிச்சை எடுத்துக் கொண்டு ஆயுர்வேத மாணவர்கள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.
தேசிய ஆயுர்வேதா நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து ஆயுர்வேத மாணவர்கள் பங்கேற்றனர். இதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 733 மாணவர்களுக்கு நாஸ்ய கர்மா என்ற சிகிச்சை அளிக்கப்பட்டது. நாஸ்ய கர்மா என்பது மூக்கின் வழியாக மூலிகை எண்ணெய்யை செலுத்துவதாகும். ஒரே சமயத்தில் 733 மாணவர்களுக்கு சுமார் 7 நிமிடங்கள் இந்த ஆயுர்வேத சிகிச்சையை செய்யப்பட்டது.
கின்னஸ் சாதனை புத்தகத்தின் அதிகாரப்பூர்வ ஆணையர் ஸ்வப்னில் தன்கரிகர் மாணவர்களுக்கு சான்றிதழை வழங்கினார். மாணவர்கள் நாஸ்ய கர்மா சிகிச்சை அளித்தது அனைவரையும் கவரும் வகையில் இருந்ததாக ஆணையர் கூறினார். ஆயுர்வேதா உலகின் மிகச்சிறந்த சிகிச்சை முறை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் தெரிவித்தனர்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்