பொதுச்செயலாளர் சசிகலாவால் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும். இன்று நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று டிடிவி தினகரன் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும்போது, ‘ பொதுச்செயலாளர் சசிகலாவால் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும். இன்று நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது. இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா, செல்லாதா என்பதை உயர்நீதிமன்றம் தீர்மானிக்கும். துரோகமும் துரோகமும் கூட்டணி வைத்து நடக்கும் ஆட்சியை தொண்டர்களும் மக்களும் விரும்பவில்லை. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புமாறு மக்கள் என்னிடம் கூறுகிறார்கள். நடைபெறுவது ஜெயலலிதாவின் ஆட்சியல்ல; தேர்தல் வந்தால் அவர்களால் டெபாசிட் கூட வாங்க முடியாது.
என்னால் மீண்டும் ஆட்சியமைக்க முடியும் என நான் செல்லுமிடமெல்லாம் மக்கள் கூறுகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்த 5 அமைச்சர்கள், எம்எல்ஏக்களை நான் தடுத்து நிறுத்தினேன். எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிவர்தான் செம்மலை. ஆளுநர் 2 நாட்களில் முடிவெடுப்பார் என நம்புகிறேன். இல்லையெனில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆட்சி தொடர்ந்தால் அதிமுகவுக்கு அவமானம் என்பதால்தான் ஆட்சியை அகற்ற உள்ளேன். பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியவர்கள் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா?’ என்று கேள்வி எழுப்பினார்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!