தலைவாசல் அருகே அடுத்தடுத்து 2 ஏரிகளில் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து மிதக்கின்றது. மீன்கள் இறப்பால் துர்நாற்றம் வீசுவதோடு கால்நடைகளில் தண்ணீர் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள மணிவிழுந்தான் பகுதியில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே பொதுப்பணித்துறை கட்டுபாட்டின் கீழ் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. அதனருகே 60 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இரு ஏரிகளுக்கு வசிஷ்ட நதியில் இருந்து நீர்வரத்து உள்ளது.
இதையும் படிங்க... முடிந்தது அட்சய திருதியை - மீண்டும் உயர்வில் தங்கத்தின் விலை! ஒரு சவரன் விலை என்ன?
இந்நிலையில் இரு ஏரிகளிலும் திடீரென லட்சக்கணக்கான மீன்கள் நேற்று முதல் இறந்து மிதக்கின்றது. இதனால் அவ்வழியில் துர்நாற்றம் வீசுவதால் சாலையில் செல்பவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் ஏரி பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத சூழலும் நிலவுகிறது. மணிவிழுந்தான் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சேகோ ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் மீன்கள் இறந்தனவா அல்லது வெயில் தாகத்தினால் இறந்தனவா என பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இறந்த மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
’காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் என் மகன் தற்கொலை’ - நீதிமன்றத்தை நாடிய தாய்!
கிழிக்கப்பட்ட சட்டை.. ரத்த காயம்.. திமுக நிர்வாகி மீது தாக்குதல் - குன்றத்தூரில் பரபரப்பு
கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் - தமிழ் நடிகர், நடிகைகளில் இவர்கள் தான் டாப்!
காசிமேடு: கடலுக்குள் கவிழ்ந்த படகு.. நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்.. நடந்தது என்ன?
‘2012ல் ஷாரூக்கானிடம் இதற்காகத்தான் ஐபிஎல் வாய்ப்பை நிராகரித்தேன்’- ம.பி கோச் சந்திரகாந்த்
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix