அமெரிக்காவில் கிரீன் கார்டு விசா எண்ணிக்கை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட ஏராளமான வெளிநாட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எனினும் அதில் சிலருக்கு மட்டுமே அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கான கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிரீன் கார்டு ஒதுக்கப்படும் என்பதால் அதற்காக விண்ணப்பித்து பல ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்காவில் காத்துள்ளனர்.
இந்நிலையில் கிரீன் கார்டுகளுக்கான எண்ணிக்கை வரம்பை அகற்ற வழிவகுக்கும் மசோதாவை நீதித்துறைக்கான அமெரிக்க எம்பிக்கள் குழு நிறைவேற்றியுள்ளது. குடும்பம் சார்ந்த குடியேற்றங்களுக்கான விசாக்கள் எண்ணிக்கையை 7இல் இருந்து 15ஆக அதிகரிக்கவும் அக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. திறமையாளர்களை தக்க வைத்துக்கொள்வதற்கான நோக்கிலேயே இம்மசோதா கொண்டு வரப்படுவதாக அக்குழுவின் உறுப்பினர் ஜோ லாஃப்கிரன் தெரிவித்தார்.
அடுத்து இம்மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதிபரின் ஒப்புதலை பெற்ற பின் சட்டமாக மாறும். இம்மசோதா சட்டமாக மாறுவது மூலம் அமெரிக்காவில் கிரீன் கார்டுக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் இந்தியர்கள், சீனர்கள் அதிகளவில் பலன் பெறுவர்
Loading More post
’காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததால் என் மகன் தற்கொலை’ - நீதிமன்றத்தை நாடிய தாய்!
கிழிக்கப்பட்ட சட்டை.. ரத்த காயம்.. திமுக நிர்வாகி மீது தாக்குதல் - குன்றத்தூரில் பரபரப்பு
கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் - தமிழ் நடிகர், நடிகைகளில் இவர்கள் தான் டாப்!
காசிமேடு: கடலுக்குள் கவிழ்ந்த படகு.. நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்.. நடந்தது என்ன?
‘2012ல் ஷாரூக்கானிடம் இதற்காகத்தான் ஐபிஎல் வாய்ப்பை நிராகரித்தேன்’- ம.பி கோச் சந்திரகாந்த்
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix