பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நிச்சயம் நடக்கும் என அமைச்சர் மூர்த்தி உறுதி செய்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் உலக புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துவந்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் மூர்த்தி உறுதி செய்திருக்கிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்றும், ஜல்லிக்கட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை முதல்வர் இன்று வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் அறிவிப்பு வெளியானபிறகு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
தமிழகமெங்கும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் இந்த தகவலை தெரிவித்திருக்கிறார். மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும், அதேசமயம் கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்