கேப்டவுன் வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு டிரம்ஸ் இசை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒமைக்ரான் பெருந்தொற்றுக்கு மத்தியில் போட்டிகள் நடைபெறுவதால் தென் ஆப்பிரிக்கா சென்றதிலிருந்து இந்திய வீரர்கள் கடும் பயோ-பபுள் வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
முதல் டெஸ்டில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 11-ம் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது. இந்த போட்டிதான் தொடரின் முடிவை தீர்மானிக்கும் முக்கியமான ஆட்டம் என்பதால் இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியினர் நேற்று (சனிக்கிழமை) தனி விமானம் மூலம் கேப்டவுன் வந்தடைந்தனர். அவர்களுக்கு ஹோட்டலில் டிரம்ஸ் இசை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வீடியோவினை பிசிசிஐ தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது.
இதையும் படிக்க: சிட்னி டெஸ்டின் 2 இன்னிங்ஸிலும் சதம் விளாசிய கவாஜா: இமாலய இலக்கை விரட்டும் இங்கிலாந்து
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'