நாடெங்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.
தற்போது தினசரி கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா முதல் அலையில் அதாவது 2020ஆம் ஆண்டில் தினசரி தொற்றுகள் 10000லிருந்து ஒரு லட்சத்து பத்தாயிரத்தை தொட 98 நாட்கள் ஆன நிலையில், 2ஆவது அலையில் இதற்கு 63 நாட்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் தற்போது வெறும் பத்தே நாட்களில் நாடெங்கும் தினசரி கொரோனா தொற்றுகள் 10 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை கடந்துள்ளன.
கடந்த டிசம்பர் 28ஆம் தேதி தினசரி தொற்றுகள் சுமார் 7 ஆயிரமாக மட்டுமே இருந்த நிலையில் ஜனவரி 7ஆம் தேதி அது ஒரு லட்சத்து 17 ஆயிரத்தை கடந்துள்ளது. தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, கேரளா, தமிழகம் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. எனினும் ஆறுதல் தரும் விதமாக இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து கட்டுக்குள்ளேயே இருப்பது குறிப்பிடத்தக்கது
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?