புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 29ஆம் தேதி தெற்கு அந்தமான் அருகே உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், காற்று சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள தகவலில், ‘இன்றைய தினம் நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழையும்; தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும். நாளை கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கும் மிககனமழைக்கான வாய்ப்புள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களிலும், இன்றைய தினமே பெரும்பாலான பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதன் காரணமாக இன்று நடந்துக்கொண்டிருக்கும் பள்ளிகள் யாவும் மதியம் முதல் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி: மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 மழை, வெள்ள நிவாரணமாக வழங்கப்படும்: புதுச்சேரி முதல்வர்
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!