பா.ஜ.கவுக்கு எதிராக கேள்வி எழுப்புபவர்கள் அனைவரும் நாட்டிற்கு எதிரானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், ''மத்திய பாஜக அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் நாட்டிற்கு எதிரானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அப்படியில்லாவிட்டால் வருமானவரித்துறை அல்லது அமலாக்கத்துறையிலிருந்து சோதனையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இது தான் அரங்கேறி வருகிறது.
அந்நிய நாடு ஆக்கிரமித்துள்ள இந்திய எல்லைகளை மத்திய அரசு பாதுகாக்க தவறிவிட்டது என நான் கூறினால் நான் தேசவிரோதியா?. செஸ் வரியை மத்திய அரசு திரும்பப் பெற்றால், டீசல் மற்றும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.69 மற்றும் ரூ.77 ஆக குறையும்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள் : இப்படியே பேசினால் 'நாக்கை அறுத்துவிடுவோம்' - பாஜகவினருக்கு சந்திரசேகர் ராவ் மிரட்டல்
Loading More post
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு