சென்னை | தனக்கு தானே பிரசவம் பார்த்த செவிலியர் கைது; குழந்தை இறந்த நிலையில் கொலை வழக்குப்பதிவு!

தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையை கொன்ற செவிலியர் கைது. கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பு.
தனக்குத் தானே பிரசவம் பார்த்த செவிலியர் கைது
தனக்குத் தானே பிரசவம் பார்த்த செவிலியர் கைதுபுதிய தலைமுறை

செய்தியாளர் - அன்பரசன்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வினிஷா(24). இவர் தி நகரில் உள்ள விடுதியில் தங்கி கடந்த ஓராண்டாக அங்கு இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்தார். சென்னையில் பணியாற்றி வந்த செல்வமணி என்பவருடன் வினிஷாவிற்கு காதல் ஏற்பட்டு ஏழு மாதங்களாக கர்ப்பமாகி உள்ளார்.

தனக்குத் தானே பிரசவம் பார்த்த செவிலியர் கைது
சென்னை | தனக்குத்தானே பிரசவம் பார்த்த செவிலியர்... குழந்தை வெளியே வராததால் செய்த அதிர்ச்சி சம்பவம்!

இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி வினிஷாவிற்கு வயிற்று வலி அதிகமான நிலையில் விடுதியில் அவரே குழந்தையின் இரு கால்களையும் வெட்டி எடுத்து பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்தது.

பின்னர் அவரே எழும்பூர் குழுந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சைளிக்கப்பட்டு வந்தது. மேலும் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் இந்தச் சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீசார் பிறந்த குழந்தை இறக்கச் செய்தல் அல்லது இறந்து பிறக்கச் செய்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் வினிஷா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

வினிஷா
வினிஷா

இந்நிலையில் வினிஷா எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த மாம்பலம் போலீசார் அவரை நேற்றிரவு கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com