கேரளாவின் முக்கிய சுற்றுலாத் தலமான தேக்கடிக்குக் குமுளியிலிருந்துச் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால், குண்டும் குழியுமான சாலைகளில் செல்லும் சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே சுற்றுலா பயணிகள் தேக்கடியை புறக்கணிப்பதால், சுற்றுலா தொழில் பாதிப்பதாகக் கூறி வியாபாரிகள் மற்றும் சுற்றுலா தொடர்பான தொழில் செய்யும் கூட்டமைப்பினர் பழுதான சாலையை சீராக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமாக இடுக்கி மாவட்டத்தின் தேக்கடி அமைந்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினமும் ஆயிரக்கணக்கில் தேக்கடிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் குமுளியில் இருந்து தேக்கடி செல்லும் இரண்டு கிலோ மீட்டர் சாலை மிகவும் பழுதடைந்துள்ளதாகவும், குண்டும் குழியுமான சாலைகளில் செல்லும் சுற்றுலா பயணிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாவதாகவும், இதனால் சுற்றுலா பயணிகள் தேக்கடியை புறக்கணிப்பதாகவும் கூறப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் தேக்கடியை புறக்கணிப்பதால், சுற்றுலா தொடர்பான தொழில்கள் பாதிக்கப்பட்டு, தங்கள் அன்றாட வாழ்வாதாரம் பாதிப்படைவதாக சுற்றுலா தொடர்பான தொழில் செய்வோர் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். இதையடுத்து நெடு நாட்களாக சாலையை சீராக்காத பொதுப்பணித்துறையினரை கண்டித்து வியாபாரிகள் மற்றும் சுற்றுலா தொடர்பான தொழில் செய்யும் ஆட்டோ, ஜீப், கார் ஓட்டுனர் நங்கம், தங்கும் விடுதி, உணவு விடுதி கூட்டமைப்பினர் சர்பில் தேக்கடியில் கண்டன ஊர்வலம் நடந்தது. பின் குமுளியில் உள்ள கேரள பொதுப்பணித்துறை அலுவலகம் முன் நடந்த முற்றுகை போராட்டத்தில், தேக்கடியை நம்பி வரும் சுற்றுலா பயணிகளுக்கு வசதிகள் செய்து தருவதோடு, சுற்றுலா தொடர்பான தொழிலை பாதுகாக்கும் நோக்கில் பழுதான சாலையை சீராக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி