நீலகிரி மாவட்டம் முதுமலையில், பட்டாசுகள் இன்றி பசுமை தீபாவளியைக் கொண்டாட வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
அதிக சத்தங்களை எழும்பும் பட்டாசுகளை வெடிப்பதால் வனவிலங்குகள் தொந்தரவு அடைந்து ஊருக்குள் வர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, முதுமலை பகுதியில் உள்ள பொக்காபுரம், ஆச்சக்கரை உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில், பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மசினகுடி சுற்றுவட்டாரப் பகுதியில் தங்கும் விடுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகளும், தீ மூட்டவும், பட்டாசு வெடிக்கவும் வேண்டாம் என வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். தடையை மீறி பட்டாசுகளை வெடித்தால், தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைப்படிக்க...100% கொள்ளளவை எட்ட தயாராகும் காஞ்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை அணைகள்
Loading More post
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்